கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு அறிவிப்பு!
உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ, இது கடினமான முடிவாக இருந்தாலும், இதற்காகத் தாம் பல ஆண்டுகளாக தம்மைத் தயார் செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போது தமக்கும் தமது குடும்பத்திற்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அதிக நேரத்தை ஒதுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அல் நஸ்ர் (Al Nassr) அணிக்காக தற்போது விளையாடிவரும் ரொனால்டோ, கழக மற்றும் நாட்டுக்காக மொத்தம் 952 கோல்கள் அடித்துள்ள சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக அவர், ஆயிரம் கோல் என்ற இலக்கை அடைந்ததும் ஓய்வெடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலே, கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
